×

குடிபோதையில் தகராறு சமையல்காரர் அடித்து கொலை

திருப்பூர், பிப்.20:  திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்று காலை 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் உடலில் ரத்த காயத்துடன் கிடப்பதை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரத்த காயங்களுடன் இருந்தவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்ததாக கூறினர்.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் இறந்தவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ்குமார்(32), என்பதும் அவர் சமயல் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த ரவிசந்திரன்(40), என்பவரோடு சுரேஷ் நேற்று முன் தினம் திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் ஒரு விஷேச வீட்டிற்கு சமையல் வேலைக்காக வந்துள்ளனர். அப்போது இருவரும் சேர்ந்த  பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளனர்.
இதில் இருவருக்குமிடையே  தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆதிரமடைந்த ரவிசந்திரன் சுரேஷ்குமாரை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சுரேஷ்குமார் இறந்தார் என்பது தெரியவந்தது.. இதையடுத்து போலீசார் ரவிசந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : drunken cook ,
× RELATED அமைச்சர் முன்னிலையில் பாஜவினர் 100 பேர்...