×

கால்வாயில் இறைச்சி கழிவு பொதுமக்கள் அவதி

ஊட்டி, பிப். 20:  ஊட்டி அருகேயுள்ள தேவர்சோலை பகுதியில் சாலையோர கால்வாயில் தொடர்ந்து இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
 ஊட்டி  அருகே தேவர்சோலை பகுதியில் உள்ள கால்வாயில்  இறைச்சி கடைகளில் தேங்கும் கழிவுகள் கொட்டப்படுகிறது.  இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு வனவிலங்குகள் ஊருக்குள் புகும் அபாயம் நீடிக்கிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறையினரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு திறந்தவெளியில் இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க
வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Tags : canal ,
× RELATED கீழ்பவானியில் தண்ணீர் எடுத்த லாரி பறிமுதல்