பேராவூரணி பேரூராட்சியில் வரிகள் செலுத்த 28ம் தேதி கடைசி

பேராவூரணி, பிப். 20: பேராவூரணி பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை பொதுமக்கள் வரும் 28ம் தேதிக்குள் செலுத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி, தலைமை எழுத்தர் சிவலிங்கம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:

 பேராவூரணி பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் மற்றும் உரிம கட்டணம் ஆகியவற்றை வரும் 28ம் தேதிக்குள் பேரூராட்சி அலுவலகம், வரிவசூல் பணியாளர்கள் அல்லது நடமாடும் கணினி ஆன்லைன் வரிவசூல் வாகனத்தில் செலுத்தி உரிய ரசீது பெற்று கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

எனவே குறித்த காலத்துக்குள் வரியினங்களை செலுத்தி பேரூராட்சியின் அடிப்படை வசதிகளான தெருவிளக்கு, குடிநீர், சாலை பணிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் நடைபெற ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: