×

மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம்

ஊட்டி, பிப். 20: ஊட்டியில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் நேற்று நடந்தது. இதில், வாசகர் வட்ட தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட நூலக அலுவலர் ஜோதிமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கூட்டத்தின்போது, காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து வாசகர் வட்ட துைண தலைவராக ஜனார்த்தனன் தேர்வு செய்யப்பட்டார்.  பின், வாசகர் வட்ட தலைவர் மணிவண்ணன் எழுதிய பெய்த நூல் இரண்டாம் பதிப்பு வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, வரும் ஏப்ரல் மாதம் 22ம் தேதி உலக புத்தக தினத்தை சிறப்பாக கொண்டாடுவது, மாதம்தோறும் முதல் திங்கட்கிழமை வாசகர் வட்ட கூட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.   மேலும் வாசகர் வட்ட தலைவர் மணிவண்ணன், ரூ.5 ஆயிரம் செலுத்தி புரவலராக இணைத்து கொண்டார். இக்கூட்டத்தில் மைய நூலகர் சிவாஜி, வாசகர் வட்ட பொருளாளர் ஸ்ரீமஞ்சு, கவிஞர்கள் சோலூர் கணேசன், ஜே.பி., கமலம்,  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : meeting ,district center library ,
× RELATED ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன குழு கூட்டம்