சமூக நீதி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவை,  பிப். 20: கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளைகளை வலியுறுத்தி சமூக நீதி கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்பாட்டத்திற்கு சமூக நீதி கட்சியின் தலைவர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அருந்ததிய மக்களை நகரத்தை விட்டு வெளியாற்றாதே, கிராமத்தில் குடியமர்த்தி தீண்டாமையை திணிக்காதே. வெளியேற்றிய மக்களை நகரத்தில் மீண்டும் குடியமர்த்தி வாழ்வுரிமையை காத்திடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Related Stories: