×

புதுக்கோட்டையில் நிவாரணம் கேட்டு மக்கள் மறியல்

புதுக்கோட்டை,பிப்.20: புதுக்கோட்டையில் பொதுமக்கள் நிவாரணம் கேட்டு நேற்று சாலை மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை  நகராட்சிக்குட்பட்டு காந்திநகர் பகுதி. இந்த பகுதியில் கடந்த கஜா  புயலின்போது தாக்கம் அதிகமாக இருந்தது. மரங்கள் முறிந்து வீடுகளின் மேல்  விழுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அரசு அறிவித்து  நிவார்ன இதுவரை மக்களுக்கு சென்று சேர வில்லை என்று கூறப்படுகிறது. இதனால்  அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் நேற்று ஆலங்குடி-புதுக்கோட்டை சாலையை  மறித்து போராட்டத்தில் ஈடு பட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த கணேஷ்நகர் போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை யடுத்து அனைவரும்  கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Pudukottai ,
× RELATED மக்காச்சோளம் சாகுபடியில் படைப்புழுவை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம்