கறம்பக்குடி, பிப்.20: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் வியாபாரிகள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. சங்க செயலாளர் ஐயப்பன் வரவேற்றார். வியாபாரிகள் சங்க தலைவர் சாந்தியமூர்த்தி தலைமை வகித்தார். கூட்டத்தில், கறம்பக்குடியில் ஒரு மாதத்திற்கு மேலாக பின்பற்றப்படும் போக்கு வரத்து ஒரு வழி பாதையை ஒழுங்கு படுத்த வேண்டும். பேரூராட்சிகளில் போக்கு வரத்திற்கு தொந்தரவு ஏற்படுத்தும் மாடுகளை அப்புறப்படுத்த வேண் டும். போக்குவரத்து காவலர்கள் கூடுதலாக நியமித்து போக்குவரத்து காவல் நிலையம் உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
இக்கூட்டத்தில் வியாபாரிகள், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பொருளாளர் சரவணன் நன்றி கூறினார்.