கோவை, பிப். 20: தமிழ்நாடு மின்சார வாரியத்தின், கோவை மின் பகிர்மான வடக்கு வட்டத்தில் ஐ.டி.ஐ கல்வி பயின்றவர்களுக்கான, தொழிற்பழகுநர் பயிற்சிக்கான நேர்கானல் நேற்று கோவை டாடாபாத் பகுதியில் அமைந்துள்ள மின்பகிர்மான வடக்கு மேற்பார்வை அலுவலகத்தில் தொடங்கியது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நேர்காணல் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. கோவை மின் பகிர்மான வடக்கு வட்டத்திற்குட்பட்ட அலுவலகங்களில் 2018-2019 ஆம் ஆண்டிற்கான ஒருவருட கால ஐ.டி.ஐ தொழிற்பழகுநர் பயிற்சிக்கு 49 வயர்மேன் மற்றும் எலக்ட்ரீஷியன்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ 7500 ஊக்க தொகை வழங்கப்படும்.