×

பகல்நேர பாதுகாப்பு மாணவர்களுக்கு புத்தாடைகள் வழங்கும் விழா

பொன்னமராவதி, பிப்.20: பொன்னமராவதி ஒன்றிய பகல்நேர பாதுகாப்பு மாண வர்களுக்கு புத்தாடைகள் வழங்கும் விழா நடந்தது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் சார்பில் பொன்னமராவதி வட்டார வள மையத்தில் பகல் நேர பாதுகாப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் 20 மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இம்மாணவர் களை ஊக்கப்படுத்தும் விதமாக பொன்னமராவதி வட்டார கல்வி அலுவலர் ராஜாசந்திரன், அவரது மனைவி கவிதா இருவரும் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் வண்ணப் புத்தாடைகளை தங்களது சொந்த செலவில் வழங்கினர்.
விழாவில் பொன்னமராவதி வட்டார கல்வி அலுவலர் பால்டேவிட் ரொசாரியோ, வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வக்குமார், வட்டார கல்வி அலுவலக கண்காணிப்பாளர் விக்டர்பால் தேவநேசன், பகல் நேர பாதுகாப்பு மைய பயிற்சியாளர் பொன்னம்மாள், உதவியாளர் அம்சவள்ளி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : New Year ,celebration ceremony ,
× RELATED குரோதத்தை விடுத்து அன்பை விதைத்திடும் குரோதி புத்தாண்டு!