சடையம்பாளையத்தில் மானாவரி வேளாண்மை பயிற்சி

இடைப்பாடி, பிப்.20:  இடைப்பாடி அருகே சடையம்பாளையத்தில், அட்மா திட்டத்தின் கீழ் வேளாண்மைத்துறையின் சார்பில், மாவட்ட அளவிலான மானாவரி வேளாண்மை பயிற்சி நடந்தது. இதில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில், அட்மா திட்ட தலைவர் கரட்டூர் மணி தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் சாந்தி செந்தில்குமார் வரவேற்றார் வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகசுந்தரம், வேளாண்மை இணை இயக்குனர்(ஓய்வு) சுந்தர் ஆகியோர் தொழில் நுட்பம் தரமான உயர்விளைச்சல், நுண்ணூட்ட முறைகளை பயன்படுத்தினால் மகசூர் அதிகரிக்கும் முறைகள் குறித்து விளக்கமளித்தார். இந்நிகழ்ச்சகிகான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் விஜயகுமார், வட்டார தொழில் நுட்ப மேலாளர் சந்திரசேகரன்,ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: