×

கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் மணவாசி ஊராட்சி மக்கள் குடிநீருக்கு திண்டாட்டம் நிரந்தர தீர்வு காண கோரிக்கை

கரூர், பிப். 20: கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் மணவாசி ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மாயனூர் ஊராட்சி கீழ மாயனூர் காவிரியில் 40 ஆண்டுகளுக்கு முன்னர் கிணறு அமைத்து தரைமட்ட தொட்டி
கட்டப்பட்டுள்ளது.
இந்த தொட்டி பழுதாகி உள்ளது. காவிரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது தொட்டி நீரில் மூழ்கியது. இதில் தண்ணீர் மாசுபட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களினால் மணவாசி பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. குடிநீர் போதுமான அளவு வழங்க புதிய கிணறு அமைக்க வேண்டும் என பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். பஞ்சாயத்து தேர்தலை நடத்தாதால் அதிகாரிகளால் இக்கோரிக்கை கண்டுகொள்ளப்படாமல் உள்ளது. இப்பகுதியில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட ஆற்றில் நடைமேடையுடன் கூடிய புதிய கிணறு அமைக்க வேண்டும். உள்ளாட்சி அதிகாரிகள் இதில் சிறப்பு கவனம் செலுத்தி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என மணவாசி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Krishnarayapuram Union Manavasi ,
× RELATED தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்