×

திருமணமான 23வது நாளில் புதுப்பெண் தற்கொலை ஆர்டிஓ விசாரணை

கரூர், பிப். 20: கரூர் அருகே திருமணமான 23வது நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்தது குறித்து ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார்.
கரூர் வெள்ளியணை போலீஸ் சரகம் உப்பிடமங்கலம் அருகே உள்ள வெண்ணிலையை சேர்ந்தவர் சிலம்பரசன் (எ) கருப்பையா. கணினி சென்டர் நடத்தி வருகிறார், அருகில் உள்ள ஜெகதாபியை சேர்ந்த கீர்த்தனா(19) என்பவருக்கும் கருப்பையாவுக்கும் கடந்த ஜனவரி 27ம் தேதி திரு
மணம் நடைபெற்றது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கீர்த்தனா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வெள்ளியணை போலீசார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வழக்குப்பதிவு செய்தனர். திருமணமான 23 நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் இது குறித்து கரூர் ஆர்டிஓவும் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Childs Suicide RTO Investigation ,
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு