வறட்சியால் தண்ணீர் தட்டுப்பாடு இடம் பெயரும் கிடைமாடுகள்

திருமங்கலம், பிப்.20: திருமங்கலம் அருகே வறட்சியால் கடைமாடுகள் இடம் பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது. திருமங்கலம் ஒன்றியம் உச்சப்பட்டி, மொம்மையாபுரம், செட்டிகுளம், பெருமாள்பட்டி, உலகாணி, மைக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிடைமாடுகள் உள்ளன. தற்போது கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில் வறட்சியால் மாடுகளுக்கு உரிய தீவனம், தண்ணீர் கிடைக்கவில்லை.

இதனால் மதுரை மாவட்டத்தில் ஓரளவு தண்ணீர் வசதி மிக்க அழகர்கோயில், கருப்பாயூரணி, குலமங்களம், ஊமச்சிக்குளம், களிமங்கலம், குன்னத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாடுகளை ஓட்டி சென்றுள்ளனர். இந்த பகுதிகளில் கால்நடைகளுக்கு ஓரளவு தீவனம், குடிநீர் கிடைப்பதால் வறட்சி முடிவடையும் வரையில் தங்கமுடிவு செய்துள்ளதாக கிடைமாடு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories: