திருமங்கலம், பிப்.20: திருமங்கலம் அருகே வறட்சியால் கடைமாடுகள் இடம் பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது. திருமங்கலம் ஒன்றியம் உச்சப்பட்டி, மொம்மையாபுரம், செட்டிகுளம், பெருமாள்பட்டி, உலகாணி, மைக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிடைமாடுகள் உள்ளன. தற்போது கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில் வறட்சியால் மாடுகளுக்கு உரிய தீவனம், தண்ணீர் கிடைக்கவில்லை.