மதுரையில் இன்று முழு அடைப்பு பசும்பொன் முன்னேற்ற கழகம் ஆதரவு

நெல்லை, பிப்.20: மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்டக்கோரி இன்று மதுரையில் நடக்கும் முழு அடைப்பு போராட்டத்திற்கு பசும்பொன் முன்னேற்ற கழகம் ஆதரவு அளித்துள்ளது. மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும். தமிழகத்தில் மீண்டும் டிஎன்டி ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும். தமிழ் பாடப்புத்தகத்தில் பசும்பொன் தேவரின் உண்மையான வரலாற்றை இடம் பெறச் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தேவரின் தேசபக்தி முன்னணி அமைப்பு சார்பில் தேவர் சமுதாய அமைப்புகள் ஒன்றிணைந்து மதுரை முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

இப்போராட்டத்துக்கு அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது. அதன் தலைவர் ஏ.எம்.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘மதுரை பன்னாட்டு விமான முனையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மதுரையில் நடக்கும் முழு அடைப்பு போராட்டத்திற்கு பொதுமக்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள், அனைத்து சங்கங்களும் தங்கள் ஆதரவை தெரிவித்து முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற செய்ய வேண்டும்.’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: