திருமங்கலம், பிப்.20: சேலத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியனம். இவரது மகன் கார்த்திக் ஆனந்த்(28). இவரது நண்பர் திருமண விழாவில் கலந்து கொள்ள நேற்று முன்தினம் டூவீலரில் நெல்லை மாவட்டம் வள்ளியூருக்கு சென்றார். மீண்டும் டூவிலரில் ஊருக்கு திரும்பினார். திருமங்கலம் அருகேயுள்ள சிவரக்கோட்டை அருகே வந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் கார்த்திக் ஆனந்த் ஓட்டிவந்த டுவிலர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். கள்ளிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.