சோழவந்தான், பிப்.20: தமிழக காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு தென் மண்டல தலைவராக சோழவந்தானை சேர்ந்த பாதுஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லம் பாஷா பரிந்துரையின் பேரில், அகில இந்திய தலைவர் நசிம் ஜாவித் ஒப்புதலோடு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மதுரை,திண்டுக்கல், தேனி உள்பட 8 மாவட்டங்களின் சிறுபான்மைபிரிவு தென் மண்டலத் தலைவராக பாதுஷாவை நியமித்துள்ளார்.