திருமங்கலம், பிப்.20: திருமங்கலத்தை அடுத்த சித்தாலை கிராமமக்கள் தங்களது கால்நடைக்கு சிகிச்சையளிக்க 8 கிலோ மீட்டர் துாரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. திருமங்கலம் ஒன்றியம் சித்தாலை கிராமத்தின் முக்கிய தொழிலே ஆடு, மாடு, கோழி வளர்ப்பாகும். இங்கு நூற்றுக்கணக்கான கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. ஆனால் கால்நடை மருத்துவமனை மட்டும் இந்த கிராமத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சாத்தங்குடியில் அமைந்துள்ளது. இதனால் நோயுற்ற கால்நடைகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கிராமமக்கள் சுமார் 8 கிலோ மீட்டர் கால்நடைகளையும் அழைத்து செல்லவேண்டியுள்ளது. இதேபோல் மீண்டும் திரும்பி அழைத்து செல்ல வேண்டியுள்ளது.