திருமங்கலம், பிப்.20: காஷ்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட துணை ராணுவபடையினருக்கு திருமங்கலம் அருகே கிராமமக்கள் அஞ்சலி செலுத்தினர். திருமங்கலம் அருகேயுள்ள ராயபாளையத்தை சேர்ந்த கிராமமக்கள், பள்ளி மாணவர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் ஒன்று திரண்டு கிராமத்தில் முக்கிய வீதிகளில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். கிராமத்திலுள்ள மந்தை திடலில் காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.