ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

திருமங்கலம், பிப்.20: காஷ்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட துணை ராணுவபடையினருக்கு திருமங்கலம் அருகே கிராமமக்கள் அஞ்சலி செலுத்தினர். திருமங்கலம் அருகேயுள்ள ராயபாளையத்தை சேர்ந்த கிராமமக்கள், பள்ளி மாணவர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் ஒன்று திரண்டு கிராமத்தில் முக்கிய வீதிகளில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். கிராமத்திலுள்ள மந்தை திடலில் காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அலங்காநல்லூர் பஸ் நிலையத்தில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பில், தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்காக, அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் அய்யூர் தயாளன் தலைமையில் வீரர்களின் உருவ படத்திற்கு மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: