பள்ளி ஆண்டு விழா மேலூரில் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

மேலூர், பிப். 20: பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என மேலூரில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். மேலூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாள் விழா மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் தலைமை வகித்தனர். இதில் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில்,

தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் தரப்படும் என்பது போல் இல்லாமல், கேட்காமலேயே அதிமுக அரசு கொடுத்து வருகிறது. பல்வேறு நலத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது. வரும் கல்வி ஆண்டு முதல் பிளஸ் 2 முடித்த அனைவருக்கும் நிச்சயம் வேலை வாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பேசினார். கூட்டத்தில் எம்எல்ஏக்கள் ராஜன்செல்லப்பா, மாணிக்கம், நீதிபதி, சரவணன், பெரியபுள்ளான் என்ற செல்வம், முன்னாள் எம்எல்ஏ தமிழரசன் உட்பட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

இன்றைய நிகழ்ச்சிகள்

பொது      

    * 264வது வாசகர் வட்டம், எஸ்எல்எஸ் எம்ஏவிஎம்எம் ஆரிய வைசியர் கல்லூரி, கல்லம்பட்டி, பிற்பகல் 2.30 மணி.   

  ஆன்மீகம்      

  * ஆன்மிக ஜோதிடம், அருள்மிகு செல்வ விநாயகர் ஆலயம், ரயில்வே காலனி, பேசுபவர்: பொன்னையா சுவாமிகள், இரவு 7 மணி.    

* வில்லிபாரதம், சேதுபதி மேல்நிலைப்பள்ளி, மைதானம், வடக்கு வெளிவீதி, மாலை 6.30  மணி.

 *  கஜேந்திர மோட்ச திருவிழா, அருள்மிகு காளமேகப்பெருமாள் திருக்கோயில், திருமோகூர், அதிகாலை 1 மணி.  

 *  தெப்ப உற்சவம், ராமஸ்வாமி, நவநீத கிருஷ்ணசுவாமி தேவஸ்தானம், வடக்கு மாசி வீதி, ராமாயணச் சாவடித்தெரு, அதிகாலை 5 மணி.

 

சொற்பொழிவு    

   * மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி சுந்தரர் கோவில், பொருள்: மூவர் குறள், பேசுபவர்: விசயராமன், இரவு 7 மணி.

(இனிய வாசகர்களே... இப்பகுதிக்கு அமைப்புகள், சங்கங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிக்கான செய்திகளை,’  இன்றைய நிகழ்ச்சிகள்’ , தினகரன் நாளிதழ், 2/2, மேலூர் மெயின்ரோடு, உத்தங்குடி, மதுரை- 625 107 முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்)

Related Stories: