மதுரை, பிப்.20: மதுரையில் 9அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலம் கடத்துவதால் மத்திய அரசை கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியர்களின் 2ம் நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று நடந்தது. பிஎஸ்என்எல் மூலம் 4ஜி சேவையை வழங்க வேண்டும். கடந்த 1.1.2017 முதல் 15சதவிகிதம் பிட்மென்ட் உடன் 3வது ஊதிய மாற்றம் வழங்க வேண்டும். பென்சன் மாற்றம் மற்றும் அரசு விதிப்படி பென்சன் ஒதுக்கீடு செய்ய வேண்டும். பிஎஸ்என்எல்லின் நில மேலாண்மை ெகாள்கைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். சொத்துக்களை மாற்றி தருவதை விரைந்து முடித்துக்கொடுக்க வேண்டும். மொபைல் டவர்களை பராமரிக்கும் பணிக்கு அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும். இது தொடர்பாக மத்திய அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எட்டப்பட்டது.