திண்டுக்கல், பிப். 20: முஸ்லிம் மகளிருக்கு உதவும் சங்கத்திற்கு கவுரவ பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் ஏழை, எளிய, மிகவும் பின்தங்கிய முஸ்லிம் மகளிருக்கு உதவிடும் வகையில் கலெக்டர் அலுவலகத்தில் சங்கம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு அலுவல்சாரா உறுப்பினர்களாக கவுரவ செயலாளர்- இணை செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். எனவே சங்கம் சிறப்பாக செயல்பட நன்கொடை வசூல் செய்ய, சமூக தொண்டாற்றுவதில் ஆர்வம் உள்ள முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வம் உள்ளவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாலை 4.30க்கு நடைபெற உள்ள பொதுக்குழுவில் கலந்து கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.