கொடைக்கானல், பிப். 20: கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் மாடுகள் உலா வந்து நோயாளிகள், பார்வையாளர்களை அச்சுறுத்தி வருகிறது. கொடைக்கானல் கவி தியாகராஜர் ரோட்டில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு வெளிநோயாளிகளாக தினமும் 300க்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். உள்நோயாளிகளாக சுமார் 150 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இதனால் அனைத்து நாட்களும் நோயாளிகள், பார்வையாளர்கள் என அரசு மருத்துவமனையே பரபரப்பாக இருக்கும். இவ்வளவு ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதிக்குள் மாடுகளின் வருகையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மாடுகள் குறுக்கும், நெறுக்குமாக சர்வசாதாரணமாக உலா வருகின்றன. சில சமயம் மாடுகள் ஓட்டம் பிடிப்பதால் நோயாளிகள், பார்வையாளர்கள் அங்குமிங்கும் சிதறி ஓட வேண்டியுள்ளது. இதனால் பலரும் கீழே விழுந்து காயமுறுகின்றனர்.