விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ரூ.6 ஆயிரம் நிதி பெற வாட்ஸ் அப் வசதி+

திண்டுக்கல், பிப். 20: மத்தியஅரசின் ரூ.6 ஆயிரம் நிதிக்காக விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். வாட்ஸ்அப் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மத்தியஅரசு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்கான கணக்கெடுப்பு தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் மாவட்டத்தில் நிலம் வைத்திருந்து வெளிமாவட்டத்தில் வசித்து வரும் சிறு/குறு விவசாயிகள் உடன் விஏஓ தாசில்தார் மற்றும் கலெக்டர் அலுவலகத்திற்கோ தொடர்பு கொள்ளலாம்.

விவசாயிகளின் சிரமத்தை தவிர்க்கும் வகையில் தற்போது இதற்காக வாட்ஸ்அப் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. இதன்படி 75988 66000 என்ற எண்ணில் விபரங்களை தெரிவிக்கலாம். இதில் ஆதார் எண், வங்கிபாஸ் புத்தகம் முதல் பக்க நகல், ரேஷன்கார்டு எண், பட்டா எண், சர்வே எண், பரப்பு, மொபைல் எண் உள்ளிட்ட விபரங்களை அனுப்பலாம். இன்றைக்கு (பிப்.20) கடைசி தேதி என்பதால் விவசாயிகள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளும்படி கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.

Related Stories: