திண்டுக்கல், பிப். 20: மத்தியஅரசின் ரூ.6 ஆயிரம் நிதிக்காக விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். வாட்ஸ்அப் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மத்தியஅரசு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்கான கணக்கெடுப்பு தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் மாவட்டத்தில் நிலம் வைத்திருந்து வெளிமாவட்டத்தில் வசித்து வரும் சிறு/குறு விவசாயிகள் உடன் விஏஓ தாசில்தார் மற்றும் கலெக்டர் அலுவலகத்திற்கோ தொடர்பு கொள்ளலாம்.