சென்னை: திருவல்லிக்கேணி டாக்டர் நடேசன் சாலையை சேர்ந்தவர் பரசுராமன் (52). இவர், மெரினா கடற்கரையில் பொம்மை வியாபாரம் செய்து வந்தார். இவரது கடையில் குன்றத்தூரை சேர்ந்த பன்னீர்செல்வம் (57) வேலை செய்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு பரசுராமன், கடையில் வேலை செய்த பன்னீர்செல்வத்திற்கு ரூ.10 ஆயிரம் கடன் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பரசுராமன் விபத்தில் படுகாயமடைந்தார். எனவே, கடையை தொடர்ந்து நடத்த முடியாமல் மூடிவிட்டார். எனவே, தான் கொடுத்த ரூ.10 ஆயிரத்தை பன்னீர்செல்வத்திடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்காமல் காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது.