சென்னை: சார்பதிவாளர் அலுவலகங்களில் பிஓஎஸ் கருவி மூலம் கடந்த 2 நாட்களில் ரூ.36 லட்சம் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது, என்று பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் தெரிவித்தார். தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில் பத்திரம் பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம், ரூ.1000க்கும் மேல் ரொக்கமாக வசூலிக்க கூடாது என்ற உத்தரவு ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. ஆனால், இந்த நடைமுறையை பின்பற்றாமல் லட்சக்கணக்கில் ரொக்கமாக பணம் பெறப்படுவதாக கூறப்படுகிறது. இதில், கணக்கில் வராத பணம் லட்சக்கணக்கில் புழங்குவதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து அப்போது பதிவுத்துறை ஐஜியாக இருந்த குமரகுருபரன் பணம் இல்லாத பரிவர்த்தனை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் வாயிலாக கட்டணம் வசூலிக்கும் வகையில் எஸ்பிஐ வங்கி மூலம் பிஓஎஸ் கருவி நிறுவப்பட்டது.