சென்னை: சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் விசால லட்சுமி (38). இவர், தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக கடந்த 2 நாட்களுக்கு முன் கோவில்பட்டிக்கு சென்றார். அங்கு, திருமணம் முடிந்ததும் ேநற்று முன்தினம் இரவு கோவில்பட்டியில் இருந்து ெநல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.ரயில், நேற்று காலை சென்னை மாம்பலம் ரயில் நிலையம் அருகே வந்தபோது, விசால லட்சுமி இறங்குவதற்காக தனது உடமைகளை எடுத்து கொண்டிருந்தார். அப்போது, 70 சவரன் நகைகள் வைத்திருந்த பை மட்டும் மாயமானது தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த விசால லட்சுமி செய்வது அறியாமல் தவித்தார்.இதையடுத்து விசால லட்சுமி மாம்பலம் ரயில்வே காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்தார். அதன்படி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, விசால லட்சுமி வந்த ரயில் பெட்டியில் பயணம் செய்த பயணிகள் பட்டியலை எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், போலீசார் ரயிலில் பயணம் செய்த ரயில்வே ஊழியர்களிடமும் விசாரிக்கின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் மாம்பலம் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.