×

கும்மிடிப்பூண்டி அருகே பைக் மீது லாரி மோதி வியாபாரி பலி

கும்மிடிப்பூண்டி, பிப்.19: கும்மிடிப்பூண்டியில் லாரி, பைக் ேமாதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானார். சிப்காட் ேபாலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.கும்மிடிப்பூண்டி அடுத்த நத்தம் கிராமத்தை  சேர்ந்தவர் சங்கர்(48). கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் டைல்ஸ்  கடை வைத்துள்ளார். இவர், நேற்று மதியம் சிப்காட் பகுதியில் இருந்து பஜார் நோக்கில் பைக்கில் சென்று  கொண்டிருந்தார். அவர் மீது எதிர்பாராமல் லாரி மோதியது.  இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர். அதே இடத்தில் உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த சிப்காட் போலீசார், சங்கரின் சடலத்தை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். மற்றொரு சம்பவம்: புதுடெல்லியில் இருந்து சென்னை நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று நேற்று வேகமாக வந்தது. கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ரயில் நிலையத்தில் இருந்து அந்த ரயில்  மாற்று பாதையில் இயக்கப்பட்டது.அப்போது அந்த வண்டியில் பயணித்த வடமாநில இளைஞர் ஒருவர், எதிர்பாராத விதமாக  கால் தவறி கீழே விழுந்து  ரயில்  சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். இதுகுறித்து ரயில்வே போலீசார்   வழக்கு பதிவு செய்து விசாரித்து  வருகின்றனர்.

Tags : Larry ,merchant ,Gummidipoi ,
× RELATED அம்பானி இல்ல திருமண விழாவில் திருட முயன்ற திருச்சி கும்பல் கைது