திருத்தணி, பிப். 19: கனகம்மாசத்திரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருத்தணி அடுத்த கனகம்மாசத்திரம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் ஜெயதேவன் தலைமை தாங்கினார்.அவைத்தலைவர் வெங்கடேசன், இணை செயலாளர்கள் ஞானசேகர், கிருபா குமார், துணை செயலாளர்கள் ஆனந்தி அண்ணாதுரை, சுப்பிரமணி, பொருளாளர் எம்.என்.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் தண்ணீர்குளம் டி.ஏ.ஏழுமலை, மாவட்ட தகவல் தொடர்பு செயலாளர் வேலூர் நடராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது, நாடாளுமன்ற தேர்தலில் தலைமை அறிவிக்கின்ற வேட்பாளரை வெற்றி பெறச் செய்வது, கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
இதில் இளைஞரணி செயலாளர் அடிக்கல்பட்டு திலக், அம்மா பேரவை மகளிரணி மனோகரி, அண்ணா தொழிற்சங்கம் தனசேகர், இளைஞர் பாசறை கோபி, தகவல் தொழில்நுட்ப பிரிவு நவீன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.