பெரும்புதூர், பிப்.19: வந்தவாசியை சேர்ந்தவர் குப்புசாமி (45). இவரது மனைவி லட்சுமி (37). இவர்களது பேரன் பரசுராமன் (3). திருவள்ளூர் அருகே உள்ள கவரப்பேட்டையில் நடந்த உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு குப்புசாமி, லட்சுமி ஆகியோர் பேரன் பரசுராமனுடன் பைக்கில் புறப்பட்டனர்.சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வடமங்கலம் கூட்டு சாலையில் சென்றபோது, விதிமுறைக்கு மாறாக எதிர் திசையில் வந்த மினி வேன், பைக் மீது மோதியது. இதில் 3 பேரும் படுகாயமடைந்தனர்.
இதை பார்த்த பொதுமக்கள், படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு, 108ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு பொது மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குப்புசாமி, குழந்தை பரசுராமன் ஆகியோர் இறந்தனர். லட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாின்படி பெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடி மினி வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.