×

மனைவி தாய் வீட்டிற்கு சென்றதால் செல்போன் தயாரிப்பு நிறுவன அதிகாரி தூக்கிட்டு தற்கொலை

சென்னை, பிப். 19: மனைவி தாய் வீட்டுக்கு சென்றதால் விரக்தியடைந்த செல்போன் தயாரிப்பு நிறுவன அதிகாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை சூளைமேடு அவ்வைபுரம் நேரு தெருவை சேர்ந்தவர் பாலாஜி (36). காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் உள்ள செல்போன் தயாரிக்கும் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.  இவரது மனைவி பிந்து. தனியார்  வங்கியில் வேலை செய்கிறார். இவர்களுக்கு 6 வயதில் மகன் உள்ளான். கடந்த சில நாட்களாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பிந்து, கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டுக்கு  சென்றுவிட்டார்.
இதனால் கடந்த ஒரு வாரமாக பாலாஜி கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பாலாஜி, தனது அறையில் உள்ள மின் விசிறியில் மனைவி புடைவையில் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்ற பெற்றோர் வீடு திரும்பியபோது, மகன் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து சூளைமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு ெசய்து  விசாரிக்கின்றனர்.

Tags : house ,suicide ,cellphone operator ,
× RELATED சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர்...