காஞ்சிபுரம், பிப்.19: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக்த்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு திருமண உதவி திட்டத்தின் கீழ் தங்க நாணயம் தலா 8 கிராம் வீதம் 21 பேருக்கு கலெக்டர் பொன்னையா வழங்கினார்.காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், 21 பேருக்கு திருமண உதவி திட்டத்தின் கீழ் தலா 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது. மேலும் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியம் தொகை திட்டத்தின் கீழ் 2 பேருக்கு ஆணையை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்டவருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, மாவட்ட தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சந்திரசேகர், மாற்றுத் திறனாளி நல அலுவலர் ஸ்ரீநாத், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் தனலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.