×

திருமண உதவி திட்டத்தின் கீழ் 21 மாற்றுத் திறனாளிகளுக்கு தங்க நாணயம்

காஞ்சிபுரம், பிப்.19: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக்த்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு திருமண உதவி திட்டத்தின் கீழ் தங்க நாணயம் தலா 8 கிராம் வீதம் 21  பேருக்கு கலெக்டர் பொன்னையா வழங்கினார்.காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், 21 பேருக்கு திருமண உதவி திட்டத்தின் கீழ் தலா 8 கிராம் தங்க நாணயம்  வழங்கப்பட்டது. மேலும் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியம் தொகை திட்டத்தின் கீழ் 2 பேருக்கு ஆணையை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்டவருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, மாவட்ட தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சந்திரசேகர், மாற்றுத் திறனாளி நல அலுவலர் ஸ்ரீநாத், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் தனலட்சுமி உள்பட பலர் கலந்து  கொண்டனர்.

Tags : recipients ,
× RELATED இருப்பிட சான்று பெற்றவர்களுக்கே...