×

மின் திருட்டில் ஈடுபட்டவர்களிடம் ₹8.71 லட்சம் அபராதம்

சென்னை, பிப். 19: சென்னையில் 16 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, இழப்பீட்டு தொகையாக, ₹8.71 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:சென்னை மின்வாரிய அமலாக்க கோட்டம் சார்பில் கெருகம்பாக்கம், கோவூர் மற்றும் குன்றத்தூர் பகுதிகளில் கூட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, 16  மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், ₹7,96,605  இழப்பீட்டு தொகையாக மின் நுகர்வோருக்கு விதிக்கப்பட்டது.மேலும் சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க கூடுதலாக சமரச கூடுதல் தொகை ₹75,000 செலுத்தியதால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு  செய்யப்படவில்லை. மின் திருட்டு சம்பந்தமான தகவல்களை- 9445857591  என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED இடைத்தரகர்களால் சிதையும்...