×

விவசாயிகளுக்கான திட்டமான மத்திய அரசின் ₹6 ஆயிரத்துக்கு இன்று கடைசி நாள்

காஞ்சிபுரம், பிப்.19: பிரதம மந்திரி சம்மான் நிதி உதவி  திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த சிறு, குறு  விவசாய குடும்பங்களுக்கு மத்திய அரசு வருடத்திற்கு ₹6 ஆயிரம் பெறுவதற்கான விண்ணப்பம் செய்ய  இன்று கடைசி நாள் என கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:பிரதம மந்திரி சம்மான் நிதி உதவி திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த சிறு, குறு விவசாய குடும்பங்களுக்கு மத்திய அரசு வருடத்திற்கு ₹6 ஆயிரம் 3 தவணைகளாக வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு,  விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

தகுதி வாய்ந்த சிறு, குறு விவசாயிகளின் பட்டியல் தற்போது விவசாயிகளின் பார்வைக்காக கிராம நிர்வாக அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.எனவே விடுபட்ட தகுதி வாய்ந்த விவசாயிகள் இன்று மாலைக்குள்  தங்களது ஆவணங்களை கிராம நிர்வாக அலுவலரின் அலுவலகத்தில் சமர்ப்பித்து, சுய உறுதிமொழி கையொப்பமிட்டு, பதிவு செய்து கொள்ள வேண்டும்.இதற்கு பட்டா நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு நகல், கைபேசி எண் ஆகிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : Government ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...