×

மணல் கடத்திய லாரி பறிமுதல்

அரியலூர், பிப்.15: அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார்  சாத்தம்பாடி பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதிகளில் மணல் திருட்டு நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சாத்தம்பாடி அருகே பாப்பாத்தி அம்மன் கோயில் திடலில் கொள்ளிடம் மணலை டிப்பர் லாரியில் மர்ம நபர்கள் ஏற்றிகொண்டிருந்தபோது போலீசார் அவர்களை மடக்கி பிடிக்க முயன்றபோது, அவர்கள் லாரியை விட்டுவிட்டு தப்பி சென்று விட்டனர். பின்னர் விக்கிரமங்கலம் போலீசார் லாரியை கைபற்றி மணல் கடத்தியது யார் என்பது குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : Sandy ,
× RELATED நிறம் மாறும் உலகில் படத்தில் 4 ஹீரோக்கள்