×

கிணற்றில் பைப்பை சீரமைக்கும் போது உருளை கழன்று விழுந்து விவசாயி பரிதாப சாவு

இலுப்பூர்,பிப்.15: இலுப்பூர் அருகே போர்வைல் கிணற்றில் பைப்பை கழற்றி சீறமைக்கும் போது பைப்பை மேலே ஏற்றும்  போது உருளை கழன்று விழுந்து ஒருவர் பலியானார்.
இலுப்பூர் அருகே உள்ள சாத்தம்பட்டி பகுதியை சேர்ந்த முத்து கருப்பன் மகன் பாலசுப்பிரமணியன் (36).விவசாயியான இவர், இவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது வயிலில் உள்ள போர்வெல் கிணற்றில் ஏற்பட்ட பழுதை நீக்குவதற்கு உதவியாக சென்றுள்ளார்.  
அப்போது பைப்பை போரில் இருந்து வெளியே இழுக்க ஒரு உருளையில் பைப் பை கட்டி டிராக்டர் உதவியுடன் பைப்பை வெளியே இழுத்து கொண்டிருந்தனர். உருளை இணைக்கப்பட்டிருந்த போல்ட் கட்டாகி உருளை கீழே நின்று கொண்டி ருந்த பாலசுப்பிரமணியன் தலையில் விழுந்தது.
இதில் படுகாயம் அடைந்த பாலசுப்பரமணி இலுப்பூர் அரசு மருத்துவமனையில்  முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனை க்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இது குறித்து புகாரின் போரில் இலுப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு