ஈரோடு, பிப். 15: தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் பல்வேறு சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
அந்த இயக்கத்தின் தலைவர் தெய்வசிகாமணி தலைமை தாங்கினார். பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தேர்தலில் போட்டியிடும் மாநில மற்றும் தேசிய கட்சிகள் ஓட்டு வாங்குவதற்காக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம். விவசாயத்திற்கு எதிரான திட்டங்களை தடுத்து நிறுத்துவோம் என வாக்குறுதி கொடுத்து வருகின்றனர். ஆனால், அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகளை கண்டுகொள்வதில்லை. நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாஜ உடன் கூட்டணி சேரும் கட்சிகளுக்கு எங்களது கூட்டு இயக்கம் ஆதரவு கொடுக்காது.