×

தொழிலாளர் நல சட்டங்களை அமல்படுத்த வேண்டும் கூட்டத்தில் தீர்மானம்

ஈரோடு, பிப். 15: மத்திய, மாநில அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் மத்திய பொதுத்துறை ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஈரோட்டில் சிறப்பு கூட்டம் மற்றும் கருத்தரங்கம் நடந்தது.  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக பிஎஸ்என்எல் எம்ப்ளாயீஸ் யூனியன் அகில இந்திய துணை பொதுச்செயலாளர் செல்லப்பா பேசினார்.
இக் கருத்தரங்கில், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க கூடாது. ஆயுள் காப்பீட்டு துறையில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது. கல்வியை வியாபாரமாக்கி தனியார் கைகளில் ஒப்படைக்கக் கூடாது. தொழிலாளர் நலச்சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இக் கருத்தரங்கில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கிடு, பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாபு, தபால் ஊழியர் சங்க கோட்ட செயலாளர் கார்த்திகேயன், தொலைதொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : meeting ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...