×

பாராளுமன்ற தேர்தலையொட்டி இன்ஸ்பெக்டர், எஸ்ஐ.,க்கள் பணியிட மாற்றம்

ஈரோடு, பிப். 15: பாராளுமன்ற தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் 5 இன்ஸ்பெக்டர், 7 எஸ்ஐ உட்பட 12 பேர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற தேர்தல் ேததி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி, தமிழகத்தில் அரசு துறைகள் மற்றும் காவல் துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றி வரும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் போலீசார் மற்றும் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளனர்.
இதற்காக, பட்டியல் காவல்துறை சார்பில் சேகரிக்கப்பட்டது. இதையடுத்து, மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்ஐ.,க்களை பணியிடம் மாற்றம் செய்து நேற்று உத்தரவிட்டார். அதில், 59 இன்ஸ்பெக்டர், 152 எஸ்ஐ.,க்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதில், ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா-கோவை மாநகருக்கும், நக்சல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சிவக்குமார்- சேலம் மாநகரத்திற்கும், ஈரோடு தாலுகா இன்ஸ்பெக்டராக பணியாற்றி முருகன்- சேலம் மாநகரத்திற்கும், ஈரோடு ஆயுதப்படை இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பாண்டியன்-கோவை மாநகரத்திற்கும், பவானி போக்குவரத்து இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கோவிந்தராஜன்- கோவை மாநகரத்திற்கும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் எஸ்ஐ.,க்களாக பணியாற்றிய குருசாமி, உமாபதி, எஸ்.ராமசாமி, துரைசாமி, சந்திரசேகரன், ஜான்சன் பால், ஏ.ராமசாமி ஆகியோர் திருப்பூர் மாநகரத்திற்கும் என மொத்தம் 12 போலீசார் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Inspector ,Parliamentary Elections ,SI ,
× RELATED செலவின பார்வையாளர்களிடம் புகார்களை தெரிவிக்கலாம்