காங்கயம்,பிப்.15: காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட காங்கயம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக காங்கயம் நகரம், நால்ரோடு, படியூர், அகஸ்திலிங்கம்பாளையம், செம்மங்காளிபாளையம், அர்த்தநாரிபாளையம், பொத்தியபாளையம், சிவன்மலை ஆகிய இடங்களில் நாளை (பிப்.16) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.