×

ஊரகத் திறனாய்வுத் தேர்வு நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 11 பேர் தேர்ச்சி

திருத்துறைப்பூண்டி, பிப்.15:  ஊரக திறனாய்வுத் தேர்வில் திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 11 பேர் தேர்ச்சி பெற்றனர். 2018-19ம் ஆண்டு ஊரகத் திறனாய்வு தேர்வில் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ரித்திகா, தாட்சாயினி, வினிதா, ராமேஸ்வரி, விக்னேஷ், மாதவன், பழனிதாஸ், நரேஷ்ஜி, ஜவஹர், கார்தீஸ்வரன், பாலமுருகன் ஆகிய 11 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு ரூ.1000 வீதம் நான்கு ஆண்டுகளுக்கு தொகை வழங்கப்படும். அந்த காசோலைகளை மாணவர்களுக்கு தலைமையாசிரியர் தங்கராசு வழங்கினார். ஆசிரியர்கள் கலைச்செல்வன், யோகராசன், அன்புகுமார், யோகேஸ்வரி ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.

Tags : Rural Examination School ,Government Higher Secondary School ,
× RELATED ஊத்துக்கோட்டையில் 3 இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பு