×

திருத்துறைப்பூண்டி அருகே தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்ததில் தாய், குழந்தை காயம்

திருத்துறைப்பூண்டி, பிப்.15:   திருத்துறைப்பூண்டி அருகே திருவலஞ்சுழி ஊராட்சி  தகரவெளிஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் ஆனந்தபாபு. இவரது மனைவி வினிதா(24). இவர்  பிரசவத்திற்காக திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடி மாமியம்மன் கோயில்  தெருவில் உள்ள தந்தை வெற்றிமணியின் தொகுப்பு  வீட்டில் பிரசவமாகி தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை தொகுப்பு  வீட்டில் குழந்தையுடன் படுத்திருந்தபோது தொகுப்பு வீட்டின்  மேற்கூரை திடீரென்று இடிந்து விபத்தில் படுகாயமடைந்தார். குழந்தை சிறு  காயங்களுடன் தப்பியது. உடனடியாக இருவரும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து  திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : roof ,house ,Tiruthuraibandi ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்