குளத்தூர் அருகே ரகளையை தட்டிக் கேட்ட பெண் மீது தாக்குதல்

குளத்தூர், பிப். 15:  குளத்தூர் அருகே பெண்ணை தாக்கிய மீனவரை போலீசார் தேடி வருகின்றனர். குளத்தூர் அடுத்த கீழ வைப்பார் மீனவர் காலனியை சேர்ந்தவர் சகாயம். மீன்பிடித் தொழில் செய்து வரும் இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஸ்டான்லி என்பவரிடம் அவதூறாக பேசி தகராறில் ஈடுபட்டார். அப்போது அங்குவந்த ஸ்டான்லியின் உறவுக்கார பெண் அன்சி (45) என்பவர் இதை தட்டிக்கேட்டார். இதனால் ஆவேசமடைந்த சகாயம், அன்சியை தாக்கிவிட்டு தப்பிச்சென்றார். இதில் காயமடைந்த அன்சியை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின்பேரில் குளத்தூர் எஸ்ஐ வள்ளிநாயகம் வழக்குப் பதிந்து சகாயத்தை தேடி வருகிறார்.

Related Stories: