திருச்செந்தூர் கடையில் பணம் திருட்டு

திருச்செந்தூர், பிப். 15:    திருச்செந்தூர் குலசை மெயின்ரோட்டில் ஆறுமுகபாண்டியன் (42). என்பவருக்கு ஹார்டுவேர்ஸ் கடை உள்ளது. சம்பவத்தன்று  நள்ளிரவு மர்ம நபர்கள், இவரது கடை ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அங்கிருந்த கல்லாபெட்டியில் இருந்த ரூ.12 ஆயிரத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து திருச்செந்தூர் திருக்கோயில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: