×

விளாத்திகுளத்தில் சாலைகளில் நிறுத்தப்படும் பஸ்களால் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு

விளாத்திகுளம், பிப். 15:  விளாத்திகுளத்தில் எட்டயபுரம்-மதுரை ஆகிய சாலைகளின் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள், பள்ளிகள் பஸ் நிலையம் போன்றவை இயங்கி வருகின்றன. இதனால் இப்பகுதிகளில் எப்போதும் மக்கள் நடமாட்டத்திற்கு பஞ்சமிராது.  இருப்பினும் இச்சாலைகளில் மாலை நேரத்தில் கோவை, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் தொலைதூர சொகுசு பஸ்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர்.   இதையடுத்து இந்த பிரச்னைக்கு உரிய தீர்வுகாணவேண்டும். மதுரை சாலைகள் காய்கறி மார்க்கெட்டுக்கு சரக்குகள் கொண்டு வருமாறு  லாரிகளுக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி அந்த நேரத்தில் மட்டும் கனரக  வாகனங்கள் பஜார் பகுதிக்குள் வரவேண்டும். மேலும் சாலையோரங்களில் இரு சக்கர  வாகனங்கள் நிறுத்துவதற்கு கயிறுகள் கட்டி வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை  வலியுறுத்தியு விளாத்திகுளம் தாலுகா மார்க்சிஸ்ட் கட்சியினர் விளாத்திகுளம் தாசில்தார் ராஜ்குமாரிடம் மனு அளித்தனர். அப்போது மார்க்சிஸ்ட் வட்டாரச் செயலாளர் புவிராஜ், தாலுகா குழு உறுப்பினர்கள் ராமலிங்கம்,ஜோதி, நகரச் செயலாளர் பாலமுருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அப்புசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : roads ,
× RELATED பங்குனி உத்திரத்தை ஒட்டி...