தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் பெரும்படையார் கூறுகையில், ‘இந்த பகுதியை பொருத்தவரை வங்கிகளில் கடன் வாங்கியும், தங்க நகைகளை அடகு வைத்து பணம் பெற்றும் விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொண்டு உள்ளனர். தற்போதுள்ள நிலவரப்படி அவர்கள் செலவழித்த தொகை கிடைக்காததால் வேதனை அடைந்துள்ளனர். தனியார் வியாபாரிகளிடம் நெல்லை விற்பனை செய்வதால் விவசாயிகளுக்கு 1 ஏக்கருக்கு ரூ.17 ஆயிரம் வரை இழப்பு ஏற்படுகிறது' என்றார்.