தென்காசி, பிப். 15: தென்காசி மின்வாரிய செயற்பொறியாளர் கற்பக விநாயகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்காசி மங்கம்மாள்சாலை துணை மின்நிலையத்தில் இன்று(15ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி தென்காசி புதிய பேருந்து நிலையம், மங்கம்மாள்சாலை பகுதிகள், சக்திநகர், காளிதாசன்நகர், ஹவுசிங்போர்டு, கீழப்புலியூர் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இவ்வாறு கூறியுள்ளார்.