×

சிறுமியை கடத்தி பலாத்காரம் போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

சேலம், பிப்.15: சேலத்தில் சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் கே.ஆர்.தோப்பூரைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் ரமேஷ்(25) கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 7 மாதமாக, களரம்பட்டி பகுதியில் புதிய வீடு கட்டும் வேலையில் ஈடுபட்டு வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று விட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், டவுன் மகளிர் போலீசார் கொத்தனார் ரமேசை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று கே.ஆர்.தோப்பூரில் வைத்து ரமேசை கைது செய்தனர். அவருடன் இருந்த சிறுமியை மீட்டனர். சிறுமியை கேரளாவுக்கு கடத்தி சென்ற ரமேஷ், அவரை திருமணம் செய்ததுடன், பலாத்காரத்திலும் ஈடுபட்டது தெரியவந்தது. அவர் மீது கடத்தல், போக்சோ, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார், பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : kidnapping ,
× RELATED பஞ்சாப்பில் வழிப்பறியில் ஈடுபட்ட நைஜீரியா, கானா நாட்டு பெண்கள் கைது