×

கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நெய்காரப்பட்டியில் ஊராட்சி சபை கூட்டம்

சேலம், பிப்.15: சேலம் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், நெய்காரப்பட்டியில் ஊராட்சி சபை கூட்டம் நேற்று நடந்தது.  சேலம் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், பனமரத்துப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட நெய்க்காரப்பட்டியில் ஊராட்சி சபை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் கந்தசாமி முன்னிலை வகித்தார். இதில், கொள்கை பரப்பு இணை செயலாளர் சந்திரகுமார், மருத்துவரணி மாநில துணை செயலாளர் கோகுல் கிருபாசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து ெகாண்டவர்கள், சமத்துவபுரத்திற்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். ஊராட்சி முழுவதும் உள்ள சாக்கடைகளை சீரமைத்து, குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். நெய்க்காரப்பட்டி ஸ்டேஷனில் மீண்டும் பயணிகள் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில், ஒன்றிய பொருளாளர் வெங்கடாசலம், துணை செயலாளர் ராஜா, இளைஞரணி அமைப்பாளர் சந்திரமோகன், துணை அமைப்பாளர் சங்கர், நிர்வாகிகள் கார்த்தி, முத்து சதீஷ், பைபாஸ் மணிகண்டன், செல்வம், சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Panchayat ,Council Meeting ,Neikarpatti ,East ,DMK ,
× RELATED வாக்களிக்க பணம் தர இருப்பதாக புகார் ஊராட்சி மன்ற தலைவி வீட்டில் ரெய்டு