×

பள்ளிகளுக்கிடையிலான வாலிபால் போட்டி ஓசூர் அரசு பள்ளி மாணவிகள் முதலிடம்

ஓசூர், பிப்.15: சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான, பள்ளிகளுக்கிடையேயான வாலிபால் போட்டியில், ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்தனர்.
சேலம் ஏ.என்.மங்களம் செயின்ட்மேரீஸ் பள்ளி மைதானத்தில், மாநில அளவில் பள்ளிகளுக்கிடையிலான வாலிபால் போட்டி நடந்தது. இதில் சென்னை, சேலம், ஓசூர், தர்மபுரி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 17 வயதுக்குட்பட்ட பிரிவிலான போட்டியில், ஓசூர் அரசு பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். இதையொட்டி, நேற்று ஓசூர் பெண்கள் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில், மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவிகளை தலைமை ஆசிரியர் லதா, வாலிபால் பயிற்சியாளர் தாயுமானவன், உதவி பயிற்சியாளர் மாணிக்கவாசகம் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

Tags : Wollipal Competition ,Schools ,
× RELATED நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக...