கிருஷ்ணகிரி, பிப்.15: கிருஷ்ணகிரி அடுத்த கங்கலேரி அரசு உயர்நிலைப்பள்ளியில் நுகர்வோர் தினவிழா கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி, அடுத்த கங்கலேரி அரசு உயர்நிலைப்பள்ளியில், தேசிய நுகர்வோர் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சாய்குமார் தலைமை வகித்தார். பெட்காட் பொதுச்செயலாளர் சக்தி மனோகரன், மாநில தலைவர் ஜாய், கிருஷ்ணகிரி மாவட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்க மாவட்ட தலைவர் கோபிநாத், கேசவன் உள்ளிட்டோர், குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாணவ, மாணவிகளுக்கு தேசிய நுகர்வோர் தினவிழா குறித்த வரலாற்று குறிப்புகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி, பேசினர்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகரன் பங்கேற்று பேசினார். சுகையில், அரசாணையின் அடிப்படையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வையை பொதுமக்களிடையே கொண்டு செல்வது ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் பிரதான பங்கு உண்டு. எனவே, பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் என்ன என்பதை பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மாணவ, மாணவிகள் முன்வர வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் பள்ளிஇருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். முடிவில், ஆசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.